இந்த பதிவில் “தோழி கவிதை வரிகள்” காணலாம்.
நட்பு எங்கெல்லாம் தடம் பதிக்கிறதோ அங்கெல்லாம் சாதி, மதங்களின் தடம் மண்ணோடு மண்ணாக மறைகிறது.
- தோழி கவிதைகள்
- Thozhi Kavithai In Tamil
தோழி கவிதை வரிகள்
என் இனிய தோழியே..
உறங்கிடும் வீணையை
மென்மையாய் தழுவி மீட்டிடும்
விரல்களாய்.. உன் நினைவுகள்
என்றும் எனை உயிர்ப்பிக்கின்றன.
நட்பு என்பது விசித்திரமானது
விந்தையானது அதனால் ஏற்படும்
பாதிப்பு ஆழமானது.
ஆண் பெண் நட்பில் வேறில்லை
புரிந்து கொண்டு பழகியவர்கள்
உண்மையான நட்பை வளர்க்கிறார்கள்.
ஒரு நட்பின் புன்னகைக்கு
உதடுகள் தேவையில்லை
இதயம் போதுமே.!
அழகான பெண்களை கண்டால்
காதலிக்க இஷ்டம் இல்லை
ஏதோ செய்து விட்டால் என் தோழி..
நான் கேட்கத் தயங்கும் என் குரலை
நாளும் சகிப்பதாலே தோழியாக
உயர்கிறாய் என் மனதில்.
நானும் என் உயிர் நண்பியும்
பேச மொழிகள் தேவையில்லை
முகபாவங்கள் போதும்.
நல்ல தோழியின் நட்பு தாய் மடியின்
சுகம் தரும்.. ஏனென்றால்
முதல் காதல் என்றாலும்..
முதல் ஏமாற்றம் என்றாலும்
நாம் பகிர தேடுவது தோழியை தான்.
நாம் சுதந்திரமாக இருப்பது
தோழியிடம் மட்டுமே சாத்தியம்.
வாழ்வின் அழகான தருணங்களை
நம் அன்பான நட்பு உருவாக்கியது..
அதில் என்றுமே அழியாத உறவாய்
நீ உருவானாய்..
தங்கக் கட்டிலில் உறங்கினாலும்
உன் மடி உறக்கம் வராது தோழியே..
ஒட்டுமொத்தமாக என் ஒப்பற்ற
உறவும் நீ..
என் உள்ளார்ந்த அன்பும் நீ.!
என் கண்ணசைவிலே
நான் காணும்வற்றை கனபொழுதில்
கண்டறிந்தவள் நீ..
என் இதயத்தின் ஏடுகளை
நான் அறியாமலே
என்னை படித்தவள் நீ..
என் கனத்த நெஞ்சமும்
உன் கதைப்பில் கரைந்தது..
உன் நட்பினால் இருமடங்காகிய
இன்பங்களும் உண்டு..
துடைத்தெறியப்பட்ட துன்பங்களும் உண்டு..
என் வாழ்வின் இன்பம் துன்பங்களுக்கு
துணையாக உயிராய் உறவாய்
உடன் இருந்தவள் என் தோழியே.!
Thozhi Kavithai In Tamil
இறைவன் எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது என்பதற்காக
அன்னையை படைத்தான் என்பார்கள்..
அன்னை இல்லாத இடங்களிலும்
தோழி இருப்பாள் என்பதை
மறந்து விட்டார்கள்.
காதலர்களை காணும்போது
கவலைகளும் கஷ்டங்களும்
அவர்களின் கண்களில் காண்கிறேன்..
இந்த கவலைகளும் கஷ்டங்களும்
நம் நட்பில் இல்லை.
நட்பு இல்லாமல் இருப்பது
சாத்தியம் என்றால்..
அன்று உலகம் அழிவதும்
சாத்தியமே.
காதலின் நினைவுகளை விட
நட்பின் நினைவுகளுக்கு
வலி அதிகம் என்பதை சகியே
உன்னிடமே உணர்ந்தேன்.
தோழியே நேரம் கடந்து வந்த
கருமேகம் நீயே..
என் பயணத்தின் நெடுந்தூரம்
குறைத்ததும் உன் இனிய
இதழ் பேசும் மொழிகளே..
கோவில் மணியோசையை
கேட்டதில்லை இருந்தும் ரசிக்கிறேன்
கோயில் சிற்பத்தை
நீ எனக்காக வேண்டும் போது.. !
காயப்படாத மனம் இல்லை..
கண்ணீரைச் சுமக்காத
கண்களும் இல்லை..
காயத்தை ஆற்றவும்
கண்ணீரைக் காணாமல் செய்யவும்
தோழியை தவிர
வேறு யாராலும் முடியாது.
பூக்களுக்கு பேச தெரியாது
தெரிந்து இருந்தால் சொல்லி விடும்
உன்னை போல் ஒரு தோழி
எனக்கு கிடைத்திருந்தால்
தினம் தினம் வாடாமல் இருப்பேன்
என்று..