ஆசிரியர் தின கவிதை

aasiriyar thinam kavithai in tamil

என் கிறுக்கல்களை – உமது
கைகளால் சித்திரங்களாக மாற்றினீரே..
என் துயரங்களை – உமது
கைகளால் துடைத்து அரவணைத்தீரே..

பல இன்னல்களை என்னுடன்
சேர்ந்து வந்து தீர்த்தீரே..
உமது கரங்களால் என்னை
நல்வழிக்கு கொண்டு சென்றீரே..

என் நேர் அற்ற படிக்கட்டுகளை
சரிசமனாய் மாற்றி அமைத்தீரே..
இருளின் வழிகளை – எனக்கு
தீக்குச்சி ஒளியாய் காண்பித்தீரே..

ஏடுகளின் அழகை – நான்
இரசிக்க எனக்கு செய்தீரே..
எனக்குள் என்னையே – நான்
கண்டு பிடிக்க வழிப்படுத்தியவரே..

அன்பெனும் பெயருக்கு – நீர்
ஆதாரமாய் திகழ்ந்தீரே..
என் மேடு பள்ளங்களை – உமது
கை எழுத்தால் சரிப்படுத்தினீரே..

உம் அத்தனை அன்பிற்கும்
உம் அன்பான மாணவனின்..
என் அன்பான காவியமாய் – என்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

Read More:

அன்புள்ள ஆசிரியருக்கு கவிதை