Amma Pasam Kavithai In Tamil

அம்மா பாசம் கவிதைகள்

Latest collection of “Amma Pasam Kavithai In Tamil”.

  • Amma Pasam Kavithai In Tamil
  • Amma Kavithai In Tamil
  • அம்மா பாசம் கவிதைகள்

Amma Pasam Kavithai In Tamil

எல்லா குற்றங்களையும் மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம் அம்மாவின் இதயம்.

போலி இல்லாத உன் முகம் பார்த்து,
உன் மடியில் தலை சாய்ந்து,
உன் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது அம்மா.

ஆகாயத்தின் முடிவு எதுவென்றால்,
அது உன் அன்பு தான் அம்மா.!

ஒரு தாய் தன் குழந்தைக்கு பாடும்
தாலாட்டை விட.. ஏது இசை.?

கருவறையில் இருக்கும் வரை தெரியாது..
நான் இத்தனை நாள்
சொர்க்கத்தில் தான் இருந்தேன் என்று.

காய்ச்சல் வந்தால் மருத்துவம்
தேவை இல்லை..
அடிக்கடி தொட்டுப் பார்க்கும்
அம்மாவின் கையே போதுமானது.

மூன்றெழுத்து கவிதை
சொல்ல சொன்னால்
முதலில் சொல்வேன்
அம்மா என்று.

பூமி தாங்கும் முன்னே,
நம்மை பூவாய் தாங்கியவள்
நம் அன்னை.

பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள்..
அவர்களால் உருக்கவும் தெரியும்..
உருகவும் தெரியும்.

இதயத்தில் அவனையும் வயிற்றில்
அவன் உயிரையும் சுமப்பதில்
நிறைவடைகிறது
பெண்ணின் ஆசைகள்.

ஒரு பெண்ணிற்கு வெட்கம் இருக்குமானால்,
அவளுடைய ஆடையில்
ஒழுக்கம் தெரியும்.

பொதுவாக பெண்களின் சந்தோஷம்,
ஆசை, எதிர்பார்ப்பு இது எல்லாமே
வெறும் கனவாகவே
முடிந்து போய் விடுகிறது.

சிறகுகளை தானம் பெற்ற பறவைகளாய்
வாழ்கின்றனர் பெண்கள்.

ஆயிரம் அர்த்தங்களை உள்ளாகியது
அம்மா எனும் உன்னத வார்த்தை.

பள்ளிக்கூடம் பக்கம்
ஒதுங்காதவனுக்கு கூட மூன்று சொற்கள்
எழுத தெரியும் அம்மா.!

மனதில் ஒன்று வைத்து உதட்டில்
ஒன்று பேசும் துரோகம் தெரியாத உறவு
உலகில் அம்மா மட்டுமே.

கருவறையில் உன்னை இருக்க வைத்து
வெளியில் காவல் காக்கும்
தெய்வம் அம்மா.

தினம்தோறும் கவலைப்படுவாள்..
ஆனால் ஒருநாள் கூட தனக்காக
கவலைப்பட மாட்டாள் அம்மா.

அம்மா பாசம் கவிதைகள்

உலகத்தை பற்றி முதன் முதலில்
நமக்கு எடுத்துக்கூறும்
நம் முதல் குரு நம் அன்னையே.

தேடிப்பாருங்கள் உலகில்
அம்மாவை விட தேவதை
வேறு யாரும் இருக்க முடியாது.

இருட்டை போக்கி உனக்கு
வெளிச்சம் கொடுத்த
உன் தாயின் வாழ்க்கையை
நீ இருட்டாக்கி விடாதே.

சிறு பிள்ளைத்தனமாக
தவறுகள் செய்தால் பிறரை போல்
தண்டிக்காமல்,
சரியானதை சொல்லி கண்டித்து,
அழுது நடித்தால் கூட அதை
மன்னிப்பவள் நீதானே அம்மா.

தான் பட்ட துன்பங்களை
தன் பிள்ளை பட்டு விட கூடாது
என நினைக்கும் உறவு அம்மா.

முதிர் வயதில் தாயை கவனிக்காமல்,
ஆயிரம் நபர்களுக்கு
அன்னதானம் செய்தாலும்
புண்ணியம் கிடைக்காது.

நான் பெற்ற முதல் ரத்ததானம்
என் தாயின் பால்.

ஆயிரம் கோடி உறவுகள் இருந்தாலும்
அந்த உறவுகளை
எமக்கு அறிமுகப்படுத்தியவள் அம்மா..!

உயிர் கொடுத்த தெய்வமே உனக்கு
ஒரு ஜென்மம் போதாது
நன்றிக்கடன் செய்ய..
உன் அன்பிற்கு உலகம் கூட
ஈடு இணை ஆகாது.

Read more from New Tamil Quotes.

Inspirational Quotes For Youngsters Tamil