ஒரு வரி கவிதை தமிழ்

One Line Kavithai In Tamil

இந்த பதிவில் “ஒரு வரி கவிதை தமிழ்” காணலாம்.

  • ஒரு வரி கவிதை தமிழ்
  • One Line Kavithai In Tamil

ஒரு வரி கவிதை

திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது.

சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்.

அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்.

லட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்.

மனம் விட்டுப் பேசுவதைவிட சிறந்த அறிவு வேறில்லை.

அதிகாரத்தை வெல்வது அன்பு. பயத்தை வெல்வது துணிவு.

நிதானத்தை கடைபிடி. அதுவே வெற்றியின் முதற் படி.

கல்லாமையே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர்.

தாமதம் என்பது தவறுக்கு முன்னுரிமைக்குரியதாக உள்ளது.

அடிபணிந்து வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.

சோம்பேறித்தனமாக இருப்பது தற்கொலைக்குச் சமம்.

போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.

பொறுமை வெற்றியாளர்க்கு மிகவும் அவசியமான மூலதனம்.

கண்டிக்கத் தெரியாதவனுக்கு கருணை காட்டவும் தெரியாது.

சுய ஒழுக்கத்துடன் உள்ளபோது எதுவும் சாத்தியமே.

உடலையும் உள்ளத்தையும் தூய்மையுடன் வைத்திருங்கள்.

பேச்சுத் திறமைக்கு எந்த செல்வமும் இணையானது அல்ல.

உழைப்பாளன் வருத்தம் அடைந்தால் உலகம் அழிந்துவிடும்.

மழையைப் போல பலன் எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும்.

துன்பப்படுவோரிடம் கருணை காட்டுங்கள்.

பிறருக்குத் தீங்கினைச் செய்தீர்கள் என்றால் அதே தீவினை உங்களையும் ஒருநாள் சுடும்.

முடியாது என்ற சொல்லே என் அகராதியில் கிடையாது.

பிறரை இழிவுபடுத்தி உண்டாக்கபடும் எந்த ஒரு நகைச்சுவையும் நகைச்சுவை ஆகாது.

துன்பத்தைச் சிரித்து துரத்திவிடு.

நோய்க்குக் காரணமாகிறவளும் பெண்தான்; அந்த நோய்க்கு மருந்தாகிறவளும் பெண்தான்.

அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு.

உதவியை என்றும் மறக்காதீர்கள், தீமையை உடனே மறந்துவிடுங்கள்.

பொறுமையை வாழ்வில் கடைப்பிடித்தால் உயர்ந்த நிலைக்குச் செல்லலாம்.

பின்பு யோசிக்கும் போது வருத்தம் தரக் கூடிய செயலைச் செய்யாதே.

பொறாமையினால் ஒருவனின் மனதில் உருவாகும் விஷம் இறுதியில் அவனையே அழித்து விடும்.

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் நேரத்தை மட்டும் கேட்காதே!

சங்கீதம் தேவதைகளின் பேச்சு.

பயம், அச்சம் இரண்டுக்கும் பதிலாக வெற்றி மகிழ்ச்சி இரண்டையும் சிந்திக்கப் பழகுங்கள்.

போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றல் மூன்று மடங்காகும்.

One Line Kavithai In Tamil

உழைப்பு என்றும் வீண்போகாது. உழைப்பிற்குத் தகுந்த பலன் ஒருநாள் கட்டாயம் கிடைக்கும்.

நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.

நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்.

சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான்.

அவரவர் வீழ்ச்சிக்கு அவர்களேதான் காரணமாக இருக்க முடியும்.

குழந்தையின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் அடங்கி இருக்கிறது.

எதற்காகவும் காத்திருக்க வேண்டாம், இந்த நிமிடமே சரியான நேரம்.

போராட்ட குணத்தைக் கைவிட மறுப்பவர்களுக்கு, வெற்றி எப்பொழுதும் சாத்தியமே.

கலைகள் யாவற்றிலும் உணர்ச்சிகளை மிக அதிகமாய்ப் பாதிக்கக் கூடியது இசைதான்.

நம் மனம் எதைப்பற்றி அடிக்கடி சிந்திக்கிறதோ அதை நடத்தவே உள் மனம் வழிக்காட்டும்.

ஆயிரம் பீரங்கிகளை விட நான்கு பத்திரிகைகளின் எதிர்ப்பு மிக மிக ஆபத்தானது.

நமது செயல்பாடே, அறிவுத்திறனுக்கான உண்மையான அளவுகோலாகும்.

அறிவை நோக்கி தொடர்ந்து செல்லும் பாதையே, வெற்றிக்கான வழி.

எதை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ, அதையே நாம் நம்ப மறுக்கின்றோம்.

வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் இயலாமையைப்பற்றி பேச வேண்டும் என்றால், பேசாமலிருப்பதே சிறந்தது.

Read more from New Tamil Quotes.

நற்சிந்தனைகள் தத்துவங்கள் பொன்மொழிகள்

இரண்டு வரி பொன்மொழிகள்