Motivational Quotes In Tamil Words

ஊக்கமூட்டும் மேற்கோள்கள் தமிழில்

Here are the Latest Collection Motivational Quotes In Tamil Words

  • Motivational Quotes In Tamil
  • ஊக்கமூட்டும் மேற்கோள்கள் தமிழில்

Motivational Quotes In Tamil Words

அனுபவம் மெதுவாக தான் கற்பிக்கும்
தவறுகள் அதற்குரிய செலவுகள்.
எப்படிக் கற்றுக் கொள்வது என்பது
வாழ்க்கையின் மிக முக்கியமான திறமை.
தேடலை குறைத்துக்கொள் நிம்மதியாவாய்..
எதிர்பார்ப்பை தொலைத்துக்கொள் மகிழ்ச்சி அடைவாய்..
அதிகப் பேச்சை நிறுத்திக்கொள் தேடப்படுவாய்.
நீங்கள் செய்த தவறுகளை மூட்டையாக
கட்டி வைத்துக்கொண்டு கவலைப்படாதீர்கள்..
அவை தந்த பாடங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்..
கசப்பான அனுபவங்களே நம்மை இனிப்பை நோக்கிப் போகச் செய்யும்.
அமைதியாகச் செல்லும் நதியைப் போல
நல்லதையே நினைத்து நல்லதையே செய்..
தீயவை யாவும் குப்பைகள் போல் தானாகவே ஓரத்தில் ஒதுங்கி விடும்.
சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்.
தான் அழகு என்பது மயிலுக்கு தெரியாது.. தான் அழகில்லை என்பது காகத்திற்கு தெரியாது.. பிரச்சனை எல்லாம் நம்மிடம் தான் இருக்கிறது.
மனது குழப்பத்தில் இருக்கும் போது மௌனமாக இருங்கள்..
மனது கஷ்டமாக இருக்கும் போது தைரியமாக இருங்கள்.
மாற்றங்களை மாற்ற முடியும்
ஆனால் மாற்றியவர்களை மாற்ற முடியாது.
வாழ்க்கை என்பது மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வது..
மற்றவர்களின் மகிழ்ச்சியை பறிப்பது அல்ல.
புது செயலை தொடங்கும் போது பழைய அனுபவத்தை பயன்படுத்திக்கொள்.
தீமையும் நன்மையும் பிறர் தர வருவது இல்லை..
அதை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
நீங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்ள முயலுங்கள் விரைவில் சரி செய்து கொள்ளலாம்.. ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று சாதிக்காதீர்கள் எப்போதுமே சரி செய்ய முடியாது.
உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள் என்றும் நினைவில் வை..
உதவாதவர்கள் உன் வெற்றிக்குரியவர்கள் என்றும் மறந்து விடாதே.!
தவறாக செய்து விடுவமோ என்ற பயத்தில் இருப்பவனுக்கு..
நன்றாக செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதே இல்லை.
மகிழ்ச்சி என்பது உன் வீட்டில் விளைவது மற்றவர் தோட்டத்தில் அதைத் தேட வேண்டியதில்லை.
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்..
பிரச்சனைகளுக்கு தீர்வு அதை எதிர் கொள்வது.
வருவதை எதிர்கொள்ளும் மனதைரியமே சரியான வழிகாட்டும்..
குழப்பமும் பயமும் விட்டொழியுங்கள் உங்களால் முடியும்..
எவ்வளவு பெரிய பிரச்சனையையும் தன்னம்பிக்கையால் வெல்ல முடியும்.
இந்த நிலை நாளையும் தொடருமென அமைதியாக இருந்தால்..
இனி வரும் காலங்கள் எல்லாம் இப்படியே இருக்கும்..
உன் நிலையை மாற்ற உன்னால் தான் முடியும்.
தவறிழைப்பது உங்களை தோல்வியை சந்திக்க வைக்காது..
ஆனால் அந்த தவறுகளை திருத்தி
வாழ முயற்சிக்காமல் இருப்பது தான்
மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வைக்கும்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
அதை உன் தன்னம்பிக்கையால் வென்றுவிடு..
வாழ்க்கை வாழ்வதற்கே.!
பயம் என்பது ஒரு அருமருந்து
தேவையான அளவு இருந்தால் வாழ்வை நல் வழிப்படுத்தும்
அளவுக்கு மீறினால் விசமாகி வாழ்க்கையையே அழித்து விடும்.

You May Also Like:

Nandri Ketta Ulagam Quotes In Tamil

Tamil Quotes For Life