தமிழ் வெற்றி தத்துவங்கள்

Tamil Vetri Thathuvangal

இந்த பதிவில் “தமிழ் வெற்றி தத்துவங்கள்” காணலாம்.

  • தமிழ் வெற்றி தத்துவங்கள்
  • Tamil Vetri Thathuvangal

தமிழ் வெற்றி தத்துவங்கள்

1.வாழ்க்கையில் வெற்றி என்னும் படிகளை நாம் தொடும் போது அதில் தோல்வி என்னும் 1000 குழிகள் இருக்கும்.. குழியில் விழுந்து முயற்சிப்பவன் விண்ணை தொடுவான்.. குழியில் விழுந்து முயற்சிக்காதவன் மண்ணை தொடுவான் இதுதான் வாழ்க்கை.

2. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

3. நேரத்தை வீணாக்கத் துணிந்தவர்கள், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவர்கள்.

4. லட்சியம் பெரிதாக இருக்குமானால் நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்.

5. எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்

6. மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.

7. உங்கள் காலில் நில்லுங்கள், அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்.

8. எதிலேனும் சிறந்து விளங்குவதற்காக எத்தகைய முயற்சிக்கும் அஞ்சாதீர்.

9. மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.

10. கற்றுக்கொள்வதற்காக வாழுங்கள், உண்மையில் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்.

11. உங்கள் வெற்றியின் ரகசியம், உங்களுடைய தினசரி செயல்பாட்டின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது.

12. பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது ஏனென்றால் நேரம் ஈடு செய்யமுடியாதது.

13. வெற்றி என்பது உங்களுக்கு என்ன தேவையோ அதை பெறுவது; மகிழ்ச்சி என்பது நீங்கள் எதை பெற்றீர்களோ அதை விரும்புவது.

14. பலகீனமான மனங்களே சோம்பலிடம் தஞ்சம் அடைகின்றன. முட்டாள்களின் சுகமான பொழுதுபோக்குதான் சோம்பல்.

15. நிறைய பேர் அறிவுரை பெறுகிறார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள் தான் அதனால் பயன் பெறுகிறார்கள்.

16. எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்.

17. பெரிய எண்ணங்களை சிந்தனை செய்; ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு.

18. தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய விஷயம் வேறு எதுவுமில்லை.

19. வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும் எளிதில் புகழ்பெற முடியாது.

20. கெட்ட விஷயங்கள் காற்றைப்போல் ஆகி விரைவில் பரவும். நல்ல விஷயங்கள் தாமதிக்கும்.

Tamil Vetri Thathuvangal

21. உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.

22. எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.

23. திருப்தியான மனம் ஒன்றே மனிதர்களுக்குகிடைக்கும் மிகப்பெரிய கொடை.

24. தனது செயலில் தயக்கம் உடைய ஒருவர் அதில் இழப்பையே சந்திக்கிறார்.

25. எரிகிற விளக்காக இரு அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.

26. விதியை எள்ளி நகைப்பவனே வெற்றிகள் பலவற்றைக் காண்பான்.

27. வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே.

28. நேரத்தை இலாபமாக அடைபவர்களுக்கு எல்லாமே இலாபம்தான்.

29. பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.

30. வெற்றி பெற்றபின் அமைதியாக இருப்பவன், இரண்டுமுறை வென்ற மனிதன் ஆகிறான்.

31. மோசமானவற்றிற்காக நான் தயாராகவே இருக்கின்றேன்; ஆனால், சிறந்தவற்றிற்கான நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

32. செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.

33. மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.

34. தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.

35. பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.

36. மாறக்கூடியதை மாற்றுங்கள், மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்.

37. மன வலிமையுடன் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை நல்லவிதமாகப் பயன் படுத்தவும் வேண்டும்.

38. எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.

39. ஒவ்வொருவர் சொல்லுக்கும் கீழ்படிந்து கொண்டிருந்தாள் நீங்கள் சாதிக்க முடியாது.

40. ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.

Read more from New Tamil Quotes.

இன்றைய சிந்தனை துளிகள்

சிறந்த தமிழ் பொன்மொழிகள்