காதல் கவிதைகள்: காதல் கவிதை வரிகள்

காதல் கவிதைகள்: காதல் கவிதை வரிகள் மனதிற்கு இனம் புரியாத ஒரு சுகத்தை கொடுக்கும். காதல் கவிதைகள் அல்லது காதல் கவிதை வரிகள் தமிழில் தேடுபவர்களுக்கு இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும்.

உன்னை விட ஒரு அழகிய பொருளை பரிசளிக்கும் முயற்சியில் இன்று வரைநான் முடிவு கிடைக்காமல் தோற்றுக் கொண்டு தான் இருக்கின்றேன்.

மனது ஒரு நேரம் சந்தோசபடுகின்றது ஒரு நேரம் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதிக்கின்றது காரணம் நீ என் நினைவுகளில் அடிக்கடி வந்து செல்வதால்.

நீ அருகில் இல்லாத போது நீரம் போகவில்லையே எனும் கவலை, நீ அருகில் இருந்தால் நேரம் போதவில்லையே எனும் கவலை.

எப்போதும் ஒரு இடைவெளிகளும் இல்லாமல் சேர்ந்தே வாழ்வது மட்டும் உண்மையான காதல் இல்லை.. நீண்ட தொலைவில் இருந்தாலும் அன்புக்கு உரியவர்களின் நினைவுகளை சுமந்து வாழ்வதும் உண்மையான காதல் தான்.

இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி மனம் திறந்து பேச அன்பான துணை இல்லாத போது தான் புரியும் உண்மையான அன்பின் அருமை.

கடல் அலைகள் ஒரு நொடியும் ஓய்வது இல்லை அது போல தான் உன் நினைவுகளும் என் மனதில் இருந்து ஒரு நொடியும் ஓய்வதில்லை.

அன்பே அளவுக்கு மீறிய ஆசைகள் போல அளவுக்கு மீறிய உந்தன் மீதான நினைவுகள் எப்போதும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.

எனக்கு வந்திருக்கும் இந்த காதல் நோய்க்கு உன் நினைவுகளை தவிர வேறு எந்த மருந்தும் இல்லை போல் இருக்கிறது.

தண்ணீரை தவிர வேறு எங்கும் மீன் வாழ முடியாது அதே போல தான் அன்பே எனக்கு நீ இல்லாமல் இந்த யுகத்தில் வாழ முடியாது.

சூரியன் சந்திரன் இல்லாமல் கூட என் நாட்கள் கடந்து விடும் ஆனால் உன் நினைவுகளும் ஞாபகங்களும் இல்லாமல் எந்தன் நாட்கள் ஒரு போதும் கடந்து விடாது.

என் துக்கத்தையும் சோகத்தையும் மூடும் முகமூடி உந்தன் நினைவுகள் தான். உன்னை நினைக்கும் போதும் என் மனதில் இருக்கும் துன்பங்களும் துக்கங்களும் உடனே பறந்து விடும்.

என் சோகங்களுக்கு உலகில் மிகச் சிறந்த மருந்து உன் நினைவுகள் மட்டும் தான். இதற்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

காதல் கவிதைகள்