திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்

Thirumana Naal Valthukkal In Tamil Words

இந்த “திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்” பதிவு உள்ளடக்கியுள்ளது.

  • திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்
  • திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள்
  • Thirumana Naal Valthukkal In Tamil Words
  • Thirumana Naal Valthukkal

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை

1.என் இனிய மணமக்களே
அதிகமான அன்பு வேண்டாம்
மிகுதியான புரிதல் போதும்..
அக்கறை கூட வேண்டாம்
புறக்கணிப்பை புறந்தள்ளினால்
போதும்..
உங்களுக்கு என்ன பிடிக்கும்
என்பதை விட என்னவெல்லாம்
பிடிக்காது என்பதை பகிர்ந்து
கொள்ளுங்கள்..
கோபப்படுங்கள் உரிமையை கொடுத்து
உரிமையை எடுத்துக் கொள்ளுங்கள்..
சண்டை உங்களுக்குள் வரட்டும்
சமாதானப்படுத்த எவரும் தேவையில்லை..
உங்கள் உடலில் உள்ள அடையாளங்கள்
உங்களுக்கு முக்கியமில்லை..
உள்ளத்தில் உள்ளதை கண்களில்
காட்டி படித்துக் கொள்ளுங்கள்..
உணர்ச்சிகளை வெளிப்படுத்தி
உங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர்
பாதுகாத்துக் கொள்ளுங்கள்..
உங்களுக்குள் வரை முறை
தேவையில்லை நம்பினால் போதும்..
ஒருவருக்கொருவர் ஆராச்சி தேவையில்லை..
அவகாசம் கொடுத்தால் போதும்..
ஒவ்வொரு நிமிடமும் ரசித்து
கடந்திடுங்கள்
பிரச்சனையோ.. பிரியமோ.!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

2. இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

3. அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

4. கையோடு கை சேர்த்து இணைந்த
இதயங்கள் பல்லாண்டு காலம்
வாழ வாழ்த்துகிறேன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

5. அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக வாழ..
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

6. வாழ்க்கையின் அர்த்தங்களை
நீங்கள் புரிந்து..
பள்ளம் மேடுகளை நீங்கள் கடந்து..
புன்னகை சோலை வனத்தில்
பூத்து குலுங்க எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

7. செல்வங்கள் பதினாறும் பெற்று..
இன்பங்கள் அளவின்றி தொட்டு..
இன்னல்கள் இல்லா
வாழ்க்கையை நகர்த்த
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

8. வானம் பாடி பறவையாய் பறந்து..
சுதந்திர காற்று, முகிலாய் மிதந்து..
ஆயுள் முழுவதும் இணைந்தே வாழ..
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

9. நேசங்கள் நீர் போல குவிந்து..
சொந்தங்கள் கடல் போல
இணைந்து என்றென்றும்
உங்கள் அரவணைப்பில்
இணைந்து வாழ
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

10. தெளிந்த நீராய்
உங்கள் எண்ணங்கள் ஓட..
எதிலும் தடையில்லாமல்
எங்கும் ஜெயிக்க..
தலைக்கனம் இல்லாமல்
தவழ்ந்து போக
எனது வாழ்த்துக்கள்.!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

Thirumana Naal Valthukkal In Tamil Words

11. துன்பங்கள் என்று வந்தால்..
உன் கணவனுக்கு தோளாகவும்..
வெற்றி என்று வந்தால்..
என் மனைவிதான் காரணம் என்றும்
இணைபங்கு கொள்ள
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

12. அளவோடு ஆசைகளை சுமந்து..
அளவின்றி இன்பங்களை பருகி..
தள்ளாடும் வயதினிலும் கூட..
சுமையென்று நினைக்காமல்
சேர்ந்தே வாழ எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

13. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து..
இன்னல்கள் வந்தால்
பொறுத்துக்கொண்டு..
இரு வரி கவிதையாய்
இணைந்து வாழ எனது வாழ்த்துக்கள்..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

14. சந்தோஷமா கொண்டாடுங்க
இந்த நாளை..
இன்னைக்கு இருக்கிற
அதே அன்பும்.. அதே பாசமும்..
அதே சந்தோஷமும்..
இன்னும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்களுக்குள் குறையாமல்
இருக்க வாழ்த்துகிறேன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

15. அத்தனையும் மறந்துபோக வைத்த
அன்பானவன் தான்
திருமண பரிசளிக்கிறான் எனக்கு
அவன் எனக்கு கிடைத்து விட்டதை
மறந்து.!

16. நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தோடு
நம் பிள்ளைகளின் ஆசையோடு இன்னும்
ஆலமரமாய் தழைக்கட்டும்
இந்த உறவு விழுதுகளாய் தொடரட்டும்
நம் தலைமுறை..!

17. அன்பே இத் திருமண நாள் ஆனது
ஆனந்த நினைவுகளுடன்
நம் இரு மனதையும்
ஒரு மனதாய் இணைத்து
ஈடில்லா துணையை பெற்ற
நான் உன் அளவில்லா அன்பில்
அம்மாவையும் ஊன்றுகோல் போன்ற
உன் அரவணைப்பில் அப்பாவையும்
என்றென்றும் காணும் நான் ஏனோ
உன்னிடத்தில் தோற்றுப் போகிறேன்..
ஐயம் கொள்ளும் சமயத்தில்
ஒரு குழந்தையை போல்
அணைத்து கொள்கிறாய்
நெஞ்சில் ஓராயிரம் ஜென்மம் எடுப்பினும்
நீயே என் வாழ்க்கை துணையாய் அமைய
அதே கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
என் உயிரே.!

Read more from New Tamil Quotes.

காதல் கவிதைகள்: காதல் கவிதை வரிகள்