பழமொழிகள் தமிழ் விளக்கம்

Tamil Proverbs With Meaning In Tamil

இந்த பதிவில் “பழமொழிகள் தமிழ் விளக்கம்” காணலாம்.

  • பழமொழிகள் தமிழ் விளக்கம்
  • பழமொழிகள் தமிழ்
  • Tamil Proverbs With Meaning In Tamil

பழமொழிகள் தமிழ் விளக்கம்

1.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

விளக்கம் – ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில்

அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பானாக இருந்தால் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும்.

2. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

விளக்கம் – ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது நாம்தான் குழப்பமாக இருக்கிறதா ஓட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள்

நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவே தான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம்

என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதை பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்.

3. புல் தடுக்கிப் பயில்வான் போல.

விளக்கம் – புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர் தான்.

ஒரு முறை கானக பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி கரைத்து குடித்தாராம்.

எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

4. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

விளக்கம் – இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும் போது,

எல்லாம் அவனே என இறைவனை நினைத்து கொண்டோர்க்கு எந்தவித துன்பமும் இல்லை. அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது.

5. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

விளக்கம் – இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்தில் இருந்து உதாரணம் காட்டப்படுகின்றது. (போர் நிகழும் போது) கர்ணனை குந்தி தேவி தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள்.

அதற்கு கர்ணன் தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன் இருந்தால் சரி அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேருடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப்போகிறேன் என்கிறான் கர்ணன்.

Tamil Proverbs With Meaning In Tamil

6. கோத்திரம் அறிந்து பெண் கொடு.. பாத்திரம் அறிந்து பிச்சை எடு.

விளக்கம் – இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது. கோ என்பது அரசன் எனப் பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை.

அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாக பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும்.

அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும்.

7. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

விளக்கம் – நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும்.

அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்து விட்டது.

8. போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை.. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

விளக்கம் – வார்த்தைகளை சற்று பிரித்து பார்த்தால் இந்த பழமொழி சொல்லவந்த உட்பொருள் அர்த்தத்தை எளிதாக விளங்கி கொள்ளலாம்.

போக்கத்தவன் = போக்கு + கற்றவன், அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு தகுதியானவன்.

வாக்கத்தவன் = வாக்கு + கற்றவன், வாக்கு என்பது சத்தியம், அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது.

மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன்.

இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கொண்ட முறையில் வந்துவிட்டது.

9. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

விளக்கம் – இங்கு சூடு எனும் சொல் சுவடு என்று வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும் போது அது பதிக்கும் தடம் சுவடு.

அழுத்தமான சுவட்டை பாதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது.

ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம்.

10. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான.?

விளக்கம் – உடையார்பாளையம் என்பது வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம்.

உள்ளூரிலேயே சாதாரண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தானம் மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பதே இதன் உண்மை விளக்கம்.

Read more post from New Tamil Quotes.

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

கல்வி அறிவு பற்றிய பழமொழிகள்