நட்பு கவிதை வரிகள் தமிழ்

Natpu Kavithai Tamil

எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்பெனும் உறவு தனித்துவமானது. இந்த பதிவில் “நட்பு கவிதை வரிகள் தமிழ்” காணலாம்.

  • நட்பு கவிதை வரிகள்
  • உயிர் நட்பு கவிதைகள்
  • Natpu Kavithai Tamil

நட்பு கவிதை வரிகள் தமிழ்

இந்த பூமியில் பிறந்த அனைத்து
உயிர்களுக்கும் கிடைக்கும்
பந்தம் நட்பு..
ஆயிரம் கோடி கொடுத்தாலும்
என் நண்பன் ஒருவனுக்கு ஈடாகாது
ஏனென்றால் ஆயிரம் கோடி தரும்
மகிழ்ச்சியை விட என் நண்பன்
ஒருவன் தரும் மகிழ்ச்சிக்கு
என்றும் ஈடாகாது..!

ஒரு வயிற்றில் பிறக்கவில்லை இருந்தும்
பிரிவு என்பதே இதற்கு இல்லை
உடலால் பிரிந்தாலும் உயிரோடு
இணைந்திருக்கும் எந்நாளும்.

இந்த உலகத்தில் ஏற்பட்ட அனைத்து
உறவுகளும் என் தாய் தந்தை
ஏற்படுத்தி தந்தது..
என் நண்பர்களாகிய உங்களை
உங்கள் அன்பாலும், நட்பாலும்,
ஆனந்தத்தாலும் நான் ஏற்படுத்திய
உறவு தான் நட்பு.!

சாதியையும் மதத்தையும் காற்றில்
பறக்க விட்டு நெஞ்சங்களை
வஞ்சம் இல்லாமல்
இணைத்து வைக்கும்..
மாடிக்கும் குடிசைகளுக்கும்
தார் வார்த்து இறைவன்
போட்ட சாலை நட்பு..!

என் ஆனந்தத்தில் எனக்கு
மகிழ்ச்சியாகவும் என் கவலைகளில்
எனக்கு துணையாகவும் இருப்பாய்..
எனக்கு ஒரு வெற்றி கிடைத்தால்
என்னை விட கொண்டாடி மகிழ்வாய்..
அதே எனக்கு ஒரு தோல்வி கிடைத்தால்
எனக்கு நம்பிக்கையும் ஊக்கமும் தந்து
வெற்றி பெற வைப்பாய்..
கைகள் கோர்த்து செல்வது தான் நட்பு
என்றால் மகிழ்ச்சியில் ஆனந்தமாய்
கோர்ப்பது தான் நட்பு..
ஆனால் துன்பத்தில் என் கைகளை
இறுக பிடித்து எந்த சூழ்நிலையிலும்
நான் இருப்பேன் என்று
கை கோர்ப்பது தான் உண்மையான நட்பு.!

எந்த நிறக் கண்ணாடியை போட்டு
இந்த உலகத்தை பார்க்கிறமோ
அந்த நிறத்திலேயே பார்ப்பவைகள்
தெரிவது போல நல்ல நட்புக்கான
குணங்களோடு நண்பர்களைத்
தேடினால் சிறந்த நண்பர்கள்
நிச்சயம் நமக்குக் கிடைப்பார்கள்.

தேநீர் கடையில் கூடுவோம்..
நேரம் கடந்து பேசுவோம்..
சுமைகளை இறக்கி நட்பின்
சிறகில் லேசாகிப் பறப்போம்..
சிரிப்பானாலும் அழுகையானாலும்
விட்டுப்போகாமல் விரல்கள்
கோர்த்து நிற்கும் நட்பு..

நான் என்னையே துன்பத்தில்
சிரித்து ஏமாற்றிக் கொள்வேன்
ஆனால் என் நண்பர்களிடம் முடியாது
ஏனென்றால் என்னை விட
என் இன்பதுன்பங்களை அதிகம்
தெரிந்தவர்கள் என் நண்பர்கள் தான்.!

உயிர் நட்பு கவிதைகள்

நான் கவலையில் இருக்கும் போது
எனக்கு என் நண்பர்கள்
எனக்கு ஆறுதல் சொல்லமாட்டார்கள்
அந்த கவலையில் இருந்து
என்னை மீட்டெடுப்பார்கள்..
உன்னுள் ஆயிரம் கவலைகள்
இருந்தாலும்..
நண்பனின் அரை நொடி சிரிப்பு..
உன் கவலைகளையும் சிரிக்க வைக்கும்..!

என்னை நான் அறிய
நான் தேடுவது நட்பையே..
காதலில் வெற்றி தோல்வி உண்டு
நட்பில் அதில்லை என்பதாலோ
என்னவோ தனித்து நிற்கிறது நட்பு.

உலகத்தில் மலரும் மலர் எல்லாம்
ஒருநாள் உதிர்ந்து விடும்
ஏனென்றால் அது பூ..
உலகத்தில் உதிராத பூ என்றால்
அது நட்பு (பூ) மட்டுமே அதைவிட
பாசமான பூ இவ்வுலகில் இல்லை.!

அறிமுகமே இல்லாத இயல்பான
முதல் சந்திப்பு..
அவசர அவசரமாக நீ என்னை
அழைத்து கடன் வாங்கிய
பேனாவில் தொடங்கியது நம் நட்பு..
ஆனால் என் ஆயுள் வரை
தொடரும் இந்த உறவு.!

நமக்கு நட்பு என்பது எந்த இடத்தில்
கிடைக்கும் என யாராலும்
சொல்ல முடியாது.. அது எங்கு
வேண்டுமானாலும் கிடைக்கும்.

எப்படி ஒரு புத்தகம் உன் அறிவு
ஆற்றலை வளர்க்கின்றதோ..
அதுபோல ஒரு நண்பன்
உனக்கு கிடைத்தால் போதும்
பலகோடி புத்தகம் உன் கையில்
கிடைத்தற்கு சமம்.

தட்டிக்கொடுக்க நண்பன் இருந்தால்
வேதனை கூட சாதனை ஆகும்.

நமக்காக அழுபவன் நண்பன்..
நமக்காக சிரிப்பவனும் நண்பன்..
நமக்கு அறிவுரை கூறுபவன் நண்பன்..
நம் அறிவை கூர்மையாக்குபவன் நண்பன்..
உடன் பிறவா சகோதரன் நண்பன்..
உற்ற நேரத்தில் உதவுவன் நண்பன்..
உயர்வை நோக்குபவன் நண்பன்..
பகையை நீக்குபவன் நண்பன்..
நம் எண்ணங்களை புரிந்தவன் நண்பன்..
நண்பன் உருவாக்கினான் நட்பு
அதுவே உறவுகளில் மிகச் சிறப்பு..!

புன்னகை ஒன்றே போதும்
நண்பர்களை சேகரிக்க
புதைந்து போகும் வரை
தொடர்ந்து வரும் நல்ல நட்பு.

மீண்டும் ஒரு ஜென்மம் எடுப்பேனோ
என்று தெரியவில்லை
இந்த ஒரு ஜென்மத்தில் என் நட்புக்கும்
என் நண்பர்களுக்கும்
என் உயிரையும் கொடுப்பேன்.

Read more from New Tamil Quotes.

நட்பு பற்றிய பொன்மொழிகள்

தோழி கவிதை வரிகள்