Tamil Quotes For Life

Tamil Quotes

Here are the Latest Collection Tamil Quotes For Life.

  • Tamil Quotes
  • Tamil Quotes For Life

Valkai Thathuvam Quotes In Tamil

மோசமான மனநிலையில் இருக்கும்போது, மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். பொறுமையாய் காத்திருங்கள். புயல் கடக்கும், வசந்தம் வீசும்.

அச்சம் என்பது வளர்வதற்காக வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளில் ஒன்று. உங்களை அச்சத்திற்குள்ளாக்கும் விஷயங்களை ஆவலுடன் எதிர்கொள்ளுங்கள்.

தமது ஆற்றல் எது என்பதைச் சரியாக உணர்ந்து அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் எவரையும் துன்பம் நெருங்குவதே இல்லை.

தாழ்ந்த வேலை செய்தால் தாழ்ந்தவர்களல்ல உயர்ந்த வேலை செய்தால் உயர்ந்தவர்களல்ல. எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைவிட, எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே எதனையும் மதிப்பிட வேண்டும்.

யாருக்காவும் எதற்காகவும் உங்களின் மகிழ்ச்சிக்கான காரணங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது.

எல்லா மனிதர்களும் சமமானவர்களே பிறப்பினால் உயர்வடைவதில்லை. ஆனால் தங்களின் நல்ல பண்புகளினாலேயே உயர்வடைகிறார்கள்.

தெரிந்ததைச் சொல்லுங்கள், தவறில்லை. ஆனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துச் சொல்லாதீர்கள்.

எண்ணங்களைச் செயலாக்கும் ஆற்றலே, வெற்றியாக மலர்கிறது.

பகைவனை மன்னிக்காதவன் உலகில் உயர்ந்த இன்பத்தை இன்னும் அறியாதவனே.

புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிட பெரிய தப்பு.

பார்வையில் நெருப்பைக் கொள்.. முகத்தில் துணிச்சலைக் கொள்.. ஆடைகளில் ஒழுக்கம் கொள்.. உன்னைப் புகழ்வோர் மீது சந்தேகம் கொள்.. வார்த்தையில் உண்மையைக் கொள்.. உனது பாதுகாப்பு நீயே என்று உணர்ந்து கொள்.!

அதிகமான கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அடைந்த பிறகு தான் மனிதன் அதிகமான அடக்கத்தையும் அறிவையும் பெறுகிறான்.. கஷ்டம் வந்தால் கலங்காதே.. துணிந்து நில்.!

மனக்குழப்பம் இருக்கும் போது மௌனமாக இருங்கள்.. மனக்கஷ்டம் இருக்கும் போது தைரியமாக இருப்போம்.

கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால்.. நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை என்ற ஏக்கமே இல்லாமல் போய்விடும்.!

ஒடுக்கப்படும் சபைகளில் நிமிர்ந்து நில்.. புகழப்படும் சபைகளில் அடக்கமாய் நில்.

கடந்து போகும் நொடிகளில் எல்லாம் வாழ்வது மட்டும் வாழ்க்கை இல்லை.. கடக்க முடியாத நொடிகளில் வீழாமல் வாழ்வதே வாழ்க்கை.

நீ விரும்பிய ஒன்று உன்னை விட்டு விலகி சென்றால்.. உன் தகுதியை உயர்திக்கொள் விலகி சென்றது உன்னை தேடி வரும்.

யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு.

அறிவும் அனுபவமும் இருந்தால் போதிக்கலாம்.. தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாத எந்த மனிதனும் உயர்ந்ததாக சரித்திரமில்லை.

Thannambikkai Quotes In Tamil

மாறிவிட வேண்டும் என்று நம்பிக்கை கொள்வதை விட எல்லாம் மாற்றி விடுவேன் என்று தன்னம்பிக்கை கொள்வது சிறந்தது.

நம்பிக்கை தான் நாளையப் பொழுதை இன்பமாகக் கற்பனை செய்யத் தூண்டுகிறது, இன்றையத் துன்பங்களை மறந்து நாளைய இன்பத்தைப் பெற துணை நிற்கும் நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.

உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான்.

தைரியத்தின் முதல் சோதனை.. தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்.!

தன்னமிக்கை என்ற ஒற்றை மந்திரம் மனதில் இருக்கும் வரை வாழ்க்கை பயணத்தில் பயமுமில்லை பாரமுமில்லை.!

இன்பமோ துன்பமோ அனுபவிக்க போவது நீ. எனவே வாழ்க்கையில் எடுக்கும் முடிவும் உனதாகட்டும்.

வலிமையான எண்ணங்களும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் எடுத்த முயற்சியில் வெற்றியை எட்ட முடியும்.

கீழே விழுந்த வலி தெரியாமல் இருக்க குழந்தை போல நாமே எழுந்து விட வேண்டும்.. தூக்கி விட ஆள் தேடினால் வாழ்வில் சோகம் தான் மிஞ்சும்.

நேரமும் வாய்ப்பும் ஒருபோதும் காத்திருக்காது.. தன்னம்பிக்கை இருப்பவரிடம் அது வழியையும் நேரத்தையும் தானாக ஏற்படுத்தி கொடுக்கும்.

பின்னால் பேசுபவன் புகழ்ந்து பேசினால் என்ன.. இகழ்ந்து பேசினால் என்ன.. காதில் வாங்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறிக்கொண்டே இரு.!

பாதை கடினமாக இருந்தாலும் நம்முடைய வாழ்க்கை கண்டிப்பாக ஒருநாள் ஒளிமையாக மாறும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை.!

கத்தி முனையில் நடப்பதை போல கடினமாக இருந்தாலும்.. வாழ்வில் தன்னம்பிக்கை இழப்பது கூடாது.

எவன் ஒருவன் தன்னம்பிக்கை கொண்டவனாக இருக்கிறானோ.. அவன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.

வெற்றியின் அடிப்படை துணிவு.. துணிவின் அடிப்படை தன்னம்பிக்கை.. தன்னம்பிக்கையின் அடிப்படை நல்லெண்ணங்கள்.!

முடிந்து விட்டான் என்று நினைக்கும் போது எழுந்து நில்லுங்கள்.. எதிரியும் சிலிர்த்து போவான்.

முடங்கி கிடந்தால்.. முடக்கம் உனது..! எழுந்து நடந்தால்.. பாதை உனது..! எதிர்த்து நின்றால்.. வாழ்க்கை உனது.! உறுதியோடு உண்மையாய் போராடு..! உன்னை வெல்ல யாரும் கிடையாது.!

விழுந்து விட்டேன் என்று கண்ணீர் சிந்துவதை வியா எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்.. இந்த உலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது.

தன்னம்பிக்கை இல்லாதவன் எந்த கடவுளையும் நம்பி பயன் இல்லை.. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எவரைக் கண்டும் பயம் இல்லை.

கிடைக்குமா என்று கேட்காதே.. கிடைக்கும் என நம்பு.! நடக்குமா என கேட்காதே.. நடக்கும் என நம்பு.! முடியுமா என கேட்காதே.. முடியும் என நம்பு.!

தன்னம்பிக்கை என்ற ஒன்று போதும் எதையும் வென்று விடலாம்.

பிறர் புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை.. முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை.

தன்னம்பிக்கை இருக்கும் இடங்களில் ஆறுதல்களுக்கு அதிக வேலை இருப்பதில்லை.

Muyarchi Quotes In Tamil

தயங்கி கொண்டே நிற்காதே.. ஒரு முறை முயற்சி செய்து விடு.. வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்.. தோல்வியினால் இன்னும் நிறைய கற்றுக்கொள்.. முயன்றால் எதுவும் முடியும்.!

நீ தூக்கி எறியப்பட்ட இடத்திற்கே சிறப்பு விருந்தினராக செல்வது உனது திறமைக்கும் முயற்சிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.!

வென்று விட்டுப் பேசுங்கள் பொறுமையாய் கை தட்டி காதுகளை தீட்டி கேட்கும் இவ்வுலகம்.!

உயர்வுக்காக ஆசைப்பட்டு.. ஆசைக்கான முயற்சி எடுத்து முயற்சிக்கான உழைப்பை கொடுத்தால் வெற்றி நம் கையில்.!

இலட்சியம் இருந்தால் முயற்சி வரும்.. முயற்சி செய்தால் நேரம் வரும்.. நேரம் இருந்தால் வாய்ப்பு வரும்.. வாய்ப்பை பிடித்தால் வெற்றிகள் வரும்.!

நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி இலக்கு.. தன்னம்பிக்கை.. விடா முயற்சி..!

முயற்சி என்பது கானல் நீர் தான்.. ஆனால் அது நிச்சயம் ஆற்றங்கரைக்கு அழைத்தே செல்லும்.!

உங்களில் ஒருவன் தான் நான்.. உள்ளத்தாலும் உணர்வாலும் குறைந்தவன் அல்ல.. இப்படிக்கு முயற்சி.!

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே ஏனென்றால் நீ எல்லையற்ற வலிமை உடையவன்.

பல நேரங்களில் அவமானங்கள் கூட வெற்றிக்கு வழி வகுக்கும்.. நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால்.!

நாம் செய்யும் விடயங்கள் இலகுவில் நல்ல முடிவை தராது.. ஆனால் இடைவிடாத விடாமுயற்சி வெற்றி எனும் விடையை தேடி தரும்.

தொடக்கமும் முடிவும் நம் கையில் தான் முயன்றால் வெற்றி.. இல்லாவிட்டால் பயிற்சி.

என்னால் முடியுமென்ற நம்பிக்கையோடு எதையும் முயற்சி செய்யுங்கள்.. எல்லாம் வெற்றிகரமாக முடியும்.!

முடியாத விஷயங்களை முயற்சி செய்து முறியடிப்போம்.

முதல் நிலை வரவேண்டுமானால் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது முயற்சியை கைவிடக் கூடாது.

வெற்றிக்கான வழியை சிந்தித்து அதற்கான முயற்சியினை செய்து சந்தர்ப்பங்களை உருவாக்குபரே சாதனையாளர்கள்.

வெற்றி என்பது தொலைதூரமல்ல.. கனவுகளை காதலியுங்கள்.. எண்ணத்தை அதிகப்படுத்துங்கள்.. முயற்சியை அதிகப்படுத்துங்கள்.. தன்னம்பிக்கையை மனதில் வையுங்கள்.

Nalla Quotes In Tamil

உன்னால் முடியும் என்று உன்னை ஊக்கப்படுத்தும் மனிதர்களுடன் பழகு அவர்கள் தான்.. நீ தவறி விழும்போதெல்லாம் உன்னை தாங்கி முன்னேற்றி செல்வார்கள்.

நடக்கும் கால்களில் கூட எவ்வளவு வேறுபாடு.. ஒன்று முன்னால் மற்றொன்று பின்னால் ஆனால்.. முன்னால் இருக்கும் கால் கர்வப்படவும் இல்லை.. பின்னால் இருக்கும் கால் அவமானப்படவும் இல்லை.. அவைகளுக்கு தெரியும் நிமிடத்தில் நிலைமை மாறும் என்று.!

அதிகம் பேசாதவனின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு எப்பொழுதும் அதிக மதிப்பு உண்டு.

அடி வாங்கி கற்றுக் கொள்ளும் பாடங்கள் தான் அழகாய் பக்குவப்படுத்தும்.

தோல்வியை கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து வெற்றி தானாகவே ஒதுங்கி கொள்ளும்.!

உனக்கான அடையாளத்தை உருவாக்கு உனக்கான அங்கீகாரம் உன்னை தேடி வரும்.

உனக்கான தேவையை நீயே தேடிக்கொள் உன் உழைப்பின் மூலம்.

எதற்காகவும் அவசரப்படாதீர்கள் நேரம் வரும் போது தானாகவே அது நடந்தேறும்.

தனித்து நின்றாலும் சில எழுத்துக்களுக்குப் பொருள் உண்டு.. தனியாக நின்றாலும் மரங்கள் ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு.. தனியாக நின்றாலும் கலங்காதே.. சமுதாயங்கள் படிப்பதெல்லாம் தனி மனித சரித்திரங்களைத் தான்.!

இந்த உலகில் கடினமானவை நிறையவே உண்டு ஆனால்.. முடியாது என்று எதுவும் இல்லை.

நீ எதற்கு அதிகம் பயப்படுகிறாயோ அதையே எதிர்த்து நில்.

கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்.. எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள் வெற்றி காணலாம்.

சிக்கல்களை சந்திக்கும் வரை வாழ்வில் மிகுந்த வெற்றி பெற முடியாது.. சிக்கனத்தை சிந்திக்கும் வரை வாழ்வில் மிகுந்த பொருள் சேர்க்க முடியாது.. சிரிப்பை உதடுகளில் சிந்தும் வரை வாழ்வில் மிகுந்த அன்பை அடைய முடியாது.

எடுத்து சொல்வதை விட.. எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதே சக்தி வாய்ந்தது.

நாம் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் நல்லபடியாகவே முடியும்.. நல்ல முறையில் முடியவில்லை என்றால் தோற்றுவிட்டோம் என்று பொருள் அல்ல.. சவால்கள் இன்னும் முடியவில்லை என்றே பொருள்.

கவலைகளும் பிரச்சனைகளும் வந்து கொண்டே தான் இருக்கும் அதற்காக வருத்திக் கொண்டே இருக்காமல் மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்காவது கற்றுக்கொள் மகிழ்ச்சி தானாகவே உண்டாகும்.

வாழ்க்கை என்பது வளையம் போன்றது தொடக்கமும் முடிவும் தெரியாத ஒன்று.. இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டாலே மகிழ்ச்சிதான்.

நீ விரும்பும் மயிலை விட.. உன்னை விரும்பும் காக்கையே மேல்.

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக்கொள்ள கூடாது.. அது நம்மைத் தொடர்ந்து வர வேண்டும்.!

உங்களுடைய தகுதியை நினைத்து வாழ்ந்தால் மிகச்சிறப்பாக எளிமையாக மனநிறைவோடு வாழலாம்.

எந்த நிலை வந்தாலும் தன்னிலை மறக்காதே.. முடிந்ததை நினைக்காமல் வருவதை எதிர்த்து வாழ ஆரம்பியுங்கள்.

படைப்பில் பிரமாண்டமான படைப்பு நம்முடைய மனதுதான்.. மனதை அழகுபடுத்துங்கள் வாழ்க்கை அழகாகும்.

Valuable Thoughts In Tamil

இருக்கும் இடங்களையும் சேர்க்கும் சேர்க்கைகளையும் மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.. நடப்பவை அனைத்தும் நன்றாகவே நடந்து விடும் வாழ்க்கையில்.

திருந்துவதற்கு வாய்ப்பும் இடமும் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் வருந்துவதற்கு கடவுள் நேரத்தை வகுத்து விடுவான்.. செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்.!

நம்முடைய தகுதியை தீர்மானிப்பது நமக்கு நெருக்கமானவர்கள் அல்ல.. நமது செயலும் நல்லெண்ணங்களும் நடந்துகொள்ளும் விதமும்தான்.!

பிறரை எதிர்ப்பதை விட.. பணியக் கற்றுக்கொண்டால் பதவி தானாக வரும்.. வார்த்தையை விடாதீர்கள்.. வாழ்ந்து காட்டுங்கள்.!

பணமும் பாசமும் அதன் மதிப்பு தெரியாதவர்களிடம் நீடிப்பதில்லை.

உன் ஆடம்பரத்தை விட உன் அடக்கமே அனைவரிடத்திலும் பெரிதும் மதிக்கப்படும்.

அடுத்தவர் நம்மை எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும்.. நாம் நேர்வழியிலும் நடத்தையிலும் பேச்சிலும் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்போம்.!

உதிக்கும் சூரியனைப் போல வாழ்க்கை விடியட்டும்.. விழிகள் திறக்கட்டும் எண்ணங்கள் மலரட்டும்.

தகுதியில்லாத பழக்கங்களும் பழக்க வழக்கங்களும் இழக்கத் தயங்காதீர்கள்.. தகுதியில்லாததை நீக்கினால் தகுதியுடையது உங்களிடம் தானாக வந்துசேரும்.

நம் இருந்த இடத்தையும் வாழ்ந்த வாழ்க்கையும் எந்தவொருவராலும் நிரப்ப முடியாத அளவுக்கு வாழ்ந்துகாட்ட வேண்டும்.. அதுதான் உண்மையான வாழ்க்கை.

காலம் தந்த வேலை என்று கடமை செய்.. காலம் என்றும் முடிய கூடும் விரைந்து செய்.

தோற்றத்தை வைத்து ஒருவரை வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள்.

அளவற்ற ஆசையால் அவதிப்படாதே.. ஆழமற்ற சிந்தனையால் ஆத்திரப்படாதே.. மாறுதலுக்காக அடுத்தவனை தீண்டாதே.. மறந்தும் கூட மற்றவரை திட்டாதே.

வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்த பிறகு தலைமை பண்போடு இருக்கவேண்டுமே தவிர.. ஒருபோதும் தலைகணத்தோடு இருந்துவிடக் கூடாது.

ஓர் எதிரியின் பொய்யான முத்தங்களை விட.. ஒரு நண்பனின் அடிகள் சிறந்தது.

உன் எதிரியை நிலைகுலை செய்வதற்கு ஒரு பலம் வாய்ந்த ஆயுதம் உள்ளது.. அது உன் எதிரியை எந்த முடிவும் எடுக்காமல் மிகச் சுலபமாக அவனைக் குழப்பி விடும்.. அந்த ஆயுதத்தின் பெயர் தான் #மௌனம்.

வருமானத்திற்கேற்ற வாழ்க்கையை வாழுங்கள் வாழப் பழகுங்கள்.. அதுவே உங்களை தரமானதாக உயர்த்திக்கொண்டு போகும்.

Tamil Motivational Quotes

நீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை.. மெதுவாக நடந்தாலும் சரி.. வேகமாக ஓடினாலும் சரி.. ஆனால் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.

வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.

உருக்கப்படும் தங்கம் தான் அழகிய ஆபரணம் ஆகிறது.. புதைக்கப்படும் விதை தான் மரமாக வளர்ந்து கனி தருகிறது.. தோற்கும் மனிதன் தான் துணிவு பெறுகிறான்.!

உங்களுடைய உண்மையான நண்பன் விமர்சனங்கள் தான்.. அவைதான் நல்ல வாய்ப்புகளும் எதிர்த்து நிற்கும் திறமையும் பொறுமையும் சகிப்புதன்மையும் கற்றுக்கொடுக்கும்.

சுகமாக வாழ ஆசைப்பட்டால் சுமையை ஏற்க கற்றுக்கொள்ளுங்கள்.

உயர பறக்க ஆசைப்பட்டால் உழைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ஆயிரம் இடையூறுகள் வந்தாலும் ஒரு குறிக்கோளை அடையும் போது குறைகள் வந்து கொண்டேதான் இருக்கும். குறைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள்.

தன்மீது நம்பிக்கை இல்லாதவன் பிறரை ஒருபோதும் நம்புவதில்லை.. சாதிக்கும் வலிமை எல்லோருக்கும் உண்டு தன்னம்பிக்கையோடு இருங்கள்.!

நமக்கு வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதுதான் நமது வாழ்க்கையில் மாற்றங்கள் தானாக நிகழ்கிறது.

சோதனைகள் மனிதனின் மனவளத்தை கூட்டும்.. வெற்றிகள் தலைக்கணம் கூட்டும்.. தோல்விகள் உன்னை அடையாளம் காட்டும்.. சிந்தனைகள் உனக்கு நல்வழி காட்டும்.!

முடிவு எவ்வுயரம் இருப்பினும் தொடக்கம் உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்.

சிறகு விரித்தால் வானம் உன் வசம் ஆகும்.. செயல்பட தொடங்கினால் வாழ்க்கை உன் வசமாகும்.

கிடைப்பதை கொண்டு வாழ பழகி கொள்ள நீ பறவை அல்ல.. பிடித்ததை செய்ய எத்தனை துன்பம் வந்தாலும் எதிர்த்து போராடு.

ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள்.. அந்த ஆயிரத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆயுளும் போதாது.

எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.

சிந்திக்கும் போது நரியாக இருங்கள் தவறில்லை தந்திரமாக அல்ல தாராளமாக.. செயல்படும்போது கழுகாக இருங்கள் காரியத்தில் கண்ணாக இருங்கள்.!

துயரங்களில் தான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

Success Quotes In Tamil

இன்று நீ செய்யும் செயல்தான் நாளை உன் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு எந்த அதிசயமும் தேவையில்லை.. நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலே போதும்.

பல தோல்விகளைக் கடந்து சென்று நீ அடைவது உன் முதல் வெற்றி அல்ல.. கடந்து செல்லும் தோல்வியில் நீ கற்றுக்கொள்ளும் அனுபவம் தான்.. உன் முதல் வெற்றி.!

தோல்வியை மட்டும் பார்ப்பவருக்கே தெரியும் வெற்றியின் அருமை.. எனவே தன்னம்பிக்கையை மனதில் வைத்து விடாமுயற்சியுடன் போராடு.

வாழ்க்கையில் உயர ஆசை இருந்தால் வளைந்து கொடுக்க கற்றுக்கொள்.. வில் வளைந்து கொடுக்காமல் அம்பு ஒருபோதும் இலக்கை எட்டாது.

நீங்கள் வெற்றி அடைய விரும்பினால் சூழ்நிலைகளில் கைதியாக வாழாமல்.. கனவுகளில் சிற்பியாக வாழுங்கள்.

அலட்சியம் உங்களுக்குள் குடியேறினால் வாழ்க்கையில் வெற்றியை உங்களால் நெருங்க கூட முடியாது.

சோதனை உளிகொண்டு செதுக்கப்படும் போது.. நீங்கள் சாதனை சிற்பமாவது நிச்சயம்.!

எதையும் எதிர்க்க துணிந்துவிட்டால் பாதி வெற்றிக்கு சமம்.. எதையும் கடக்க பழகுவதை விட.. ஒருமுறையேனும் எதிர்க்க பழகு.!

தகுதி இருந்தால் அனைத்தும் தேடி வரும்.. தன்னம்பிக்கை இருந்தால்தான் எதிலும் வெற்றி பெற முடியும்..!

உடைக்கப்படும் போதும்.. ஒதுக்கப்படும் போதும்.. வெறுக்கப்படும் போதும்.. நம்பிக்கையுடன் போராடினால் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.!

வெற்றி எனும் தேடலுக்கு முன் தோல்வியை கடந்தால்தான் வெற்றியை காணமுடியும்.

வெற்றியின் பக்கங்கள் பெரும்பாலும் தோல்வி வரிகளாலேயே நிரப்பப்படிருக்கும்.

புதைபட்டு விட்டோம் என்று புலம்பாதே.. புதைக்காமல் விதைக்கும் விதை மரமாக மாறாது.

வெற்றியால் உன் வீரத்தை கூட்டலாம்.. ஆனால் தோல்வியால் மட்டும் தான் உன் திறனை கூட்டலாம்.

போராடு போராடு.. தோற்றாலும் போராடு சாகும் வரை போராடு.. நீ செத்து போனாலும் சரித்திரம் உன் பெயரை சொல்லும்.

தோல்விகளை தோளில் சுமப்பவனை வெற்றி இதயத்தில் சுமக்கும்.

காயம் இல்லாமல் கனவுகள் காணலாம் ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றிகள் உணர முடியாது.

Positive Quotes In Tamil

தக்க சமயத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் பயன் கருதாமல் செய்யும் போது அதன் மதிப்பு இந்த உலகத்தை விட மிகப் பெரியது.

எண்ணங்களை உயரத்தில் வை.. சிறு சிறு சந்தர்ப்பங்களும் தெளிவாக தெரியும்.

பிறரை திரும்பிப்பார்க்க வைக்க முகஅழகு தேவை.. மகிழ்ச்சியாக வாழ நல்எண்ணங்களை வளர்த்தாலே போதும்.

ஆயிரம் கவலைகள் வந்தாலும் அதை கண்டுகொள்ளாதவரின் வாழ்க்கை எப்போதும் மிகச்சிறப்பாக இருக்கும்.

நெருப்பு தான் தங்கத்தை உருக்கி அழகாக்கிறது அதேபோல துன்பம் தான் மனிதனை செதுக்கி உயர்வாக்கிறது.

நாம் ஏதோ ஒரு இடத்தில் நிராகரிக்கப்பட்டால் அல்லது தோல்வி அடைந்தால்.. அதை நினைத்து வருந்தாமல் அதை விட ஒரு சிறப்பு வாய்ப்பு நமக்காக காத்திருக்கிறது என்ற எண்ணங்களோடு அடுத்த அடியை வைப்போம்.

வாழ்க்கையே இருளென்று நினைத்து வருத்தப்படாதீர்கள்.. பல சாதனையாளர்களின் கனவுகள் முளைத்தது இருளில் தான்.

நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும்.. அற்புதங்கள் நடக்கும்.. ஆனந்தமாய் இருங்கள்.

வாழ்க்கையில் உயர.. ஒரு மனிதன் உயர்வான எண்ணங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டாலே போதும்.

சில இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை.. அதை வலியாக ஏற்றுக் கொள்வதும்.. வலிமையாக மாற்றிக் கொள்வதும் நம் எண்ண ஓட்டங்களே.

மனதை பூப்போல் வைத்திருங்கள்.. மனது விரியும்போது தான் நல்ல எண்ணங்கள் மழைபோல கொட்டும்.. புதிய சிந்தனைகள் பிறக்கும்.

எந்தவொரு விஷயத்தையும் புதிய கோணத்தோடு பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.. நிச்சயமாக தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

பிறரை கௌரவிக்க எல்லா இடத்திலும் பணம் தேவைப்படுகிறது.. ஆனால் வாழ்க்கையில் எந்த இடத்திற்கும் வர பொறுமைதான் பெரும்பாலும் தேவைப்படுகிறது.

நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது வாழ்க்கை.. மென்மையாக பேசும்போது இனிமையாகவும் வன்மையாகப் பேசும்போது கசப்பாகவும் இருக்கும்.. புரிந்து கொண்டால் வாழ்க்கை உன்கையில் வளமே உன் வாழ்க்கையில்.

சில அவமானங்களுக்கும் அனுபவங்களுக்கும் பிறகு வாழ்க்கை ஒரு புதிய கோணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதுதான் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருக்கும் பலருக்கு..!

Read more from New Tamil Quotes.

Nandri Ketta Ulagam Quotes In Tamil

Inspirational Quotes For Youngsters Tamil