Jesus Quotes In Tamil

இயேசுநாதர் பொன்மொழிகள்

Latest collection of Jesus Quotes In Tamil.

Jesus Quotes In Tamil

1.அழிவுக்கு காரணம் அகந்தை..
மேன்மைக்கு வழிகோலுவது
தாழ்மை.!

2. நிறை கண்டால் போற்றுங்கள்..
குறை கண்டால் பேசாதீர்கள்.!

3. அமைதியாக உழைத்து
அமைதியுடன் வாழ்பவர்களே
பாக்கியசாலிகள்.!

4. ஆத்திரத்தில் சக்தி குறையும்..
பொறுமையில் சக்தி கூடும்..
உங்கள் சக்தியை சேகரித்து
கொள்ளுங்கள்.!

5. அன்பு கொள்ளாதவன் கடவுளை
அறியாதவன் ஏனெனில்
அன்பே கடவுள்.!

6. இரும்பை இரும்பு கூர்மையாக்கும்..
மனிதனை அவன் நண்பன்
கூர்மையாக்குவான்.!

7. தலைவனாக இருக்க விரும்புகிறவன்..
ஊழியனாகவும் இருக்க
தெரிந்திருக்க வேண்டும்.!

8. சிறிய விஷயத்தில் நியாயம்
தவறுபவன்..
பெரிய விஷயத்திலும்
தொடருவான்.!

9. தைரியம் உள்ளவன் மட்டுமே
நேர்மையாக நடக்க முடியும்.!

10. பணத்தை நாடுபவன் முட்டாள்..
குணத்தை நாடுபவன் அறிஞன்.!

11. யாரையும் ஏமாற்றாதீர்கள்..
யாரும் உங்களை ஏமாற்றும்
அளவுக்கும் இடம்
கொடுக்காதீர்கள்.!

12. உண்மை இல்லாதவற்றை
சொல்லாமல் இருப்பாயாக.!

13. எங்கு சமாதானம் இல்லையோ..
அங்கே மறுபடியும் மறுபடியும்
சமாதானத்தை பற்றியே பேசுங்கள்.!

14. உன்னுடைய எதிரிக்கும்
உபகாரம் செய்..
உனக்கு தீங்கு செய்தோருக்கும்
நன்மை செய்.!

15. பிறர் உங்களை புகழ வேண்டும்
என்பதற்காக மட்டும் தானம்
செய்யாதீர்கள்.!

இயேசுநாதர் பொன்மொழிகள்

16. நீ சிறிய செயல்களுக்கு உண்மை
உள்ளவனாக இருந்தால்..
பெரிய செயல்களுக்கு
அதிகாரி ஆகலாம்.!

17. திருத்தப்படுவதற்காக துன்பங்களை
தாங்கிக் கொள்ளுங்கள்..
கடவுள் உங்களை
தன் பிள்ளைகளாக நடத்துகிறார்..
தந்தை தண்டித்து திருந்தாத
பிள்ளைகள் உண்டோ..?

18. நீங்கள் கோபம் கொண்டாலும்
பாவம் செய்யாது இருங்கள்..
சூரியன் உதிப்பதற்கு முன்னதாக
உங்கள் கோபம் தணிந்து விடும்.!

19. உங்களிடத்தில் நீங்கள் அன்பாக
இருப்பது போல..
மற்றவர்களிடத்திலும் அன்பாக
இருங்கள்.!

20. பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம்..
குற்றம் இல்லாதவர்கள்
இடத்தில் தான் இருக்கும்.!

21. வீண் புகழ்ச்சியை விரும்பாமலும்
ஒருவரை ஒருவர் கோபமூட்டாமலும்
ஒருவர் மேல் ஒருவர் பொறாமை
கொள்ளாமலும் இருக்க
பழகிக்கொள்வோம்.!

22. உங்களால் முடிந்தவரை எல்லோரோடும்
அமைதியுடன் வாழுங்கள்.!

23. என் மக்கள் ஒருபோதும்
வெட்கப்படுவதில்லை.!

24. தடைகளை நீக்கி போடுகிறவர்கள்..
அவர்களுக்கு முன்னாக நடந்து
செல்கிறார்கள்.!

25. நான் உன்னை தாயின் வயிற்றில்
உருவாவதற்கு முன்னே உன்னை
அறிந்தவன்.!

26. ஒருவரிடம் அன்பு செலுத்தினால்
பிரதிபலனை எதிர்பார்க்க கூடாது..
திருப்பி அவர்கள் அன்பு செலுத்தவில்லை
என்றால் அவர்களிடம்
வெறுப்புக் காட்டக் கூடாது.!

27. கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள்
அப்பொழுது அவர்
உங்களை உயர்த்துவார்.!

28. தேவனுடைய வார்த்தைகளை
படிப்பதை மட்டும் செய்யாமல்..
அது உங்கள் வாழ்க்கையை மாற்றும்
என்று நேசியுங்கள்.!

29. பொய் உதடுகள் கர்த்தருக்கு
அருவறுப்பானவை..
பொய் பேசுபவர்களின்
வாய் அடைக்கப்படும்.!

30. எடுத்தெறிந்து பேசுவது எளிது..
எடுத்தெறிந்ததை திரும்ப
பெறுவது தான் கடினமானது.!

31. என் தேவனாகிய கர்த்தர் என்
இருளை வெளிச்சம் ஆக்குவார்.!

32. நீ எதிர்பார்த்த கதவுகளை மனிதர்கள்
அடைக்கும் போது..
நீ எதிர்பாராத கதவுகளை கர்த்தர்
திறந்து கொடுப்பார்.!

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

Valkai Thathuva Kavithaigal – வாழ்க்கை தத்துவங்கள்

இரவு வணக்கம் கவிதை வரிகள்

Good Morning Quotes In Tamil