ஆசிரியர் தின கவிதை வரிகள்

teachers day kavithai in tamil

ஆழ் கடல் ஆழத்தில் – என்
ஆசானின் தோற்றத்தை பார்த்தேன்..
இன்முகத்துடன் என்னை வகுப்பிற்குள்,
அழைத்த முதல் நாள் அன்று..

காலைப்பிராத்தனை முடிவில் – என்
கால்கோல் விழா அன்று
என்னை பார்த்து சிரிக்கையில் – நான்
அம்மா பின் சென்று மறைந்தேன் அன்று..

கண்ணை கவரும் பட்டுப்புடவை
உமக்கு கச்சிதமாய் இருந்தது அன்று..
என் கையை பிடித்து – என்
இருக்கையில் அமர்த்தினீரே அன்று..

என் அம்மா என்னை விட்டு
செல்கையில் என் கண்களில் கண்ணீர்..
அழகாய் புன்னகையுடன் – என்
தலையை தடவி கட்டி அணைத்தீர் அன்று..

என் முதல் நாள் பாடசாலை – ஒரு
அற்புத நினைவுகளானவையே..
இன்று ஒரு நல்ல மனிதனாய் – நான்
உலகிற்கு தெரிந்திட ஆதாரமாய் இருந்தீர்..

இன்றும் அந்த நாள் – என்
நினைவுகளில் வருகிறது..
இத்தகைய என் ஆசானுக்கு – என்
அன்பு கனிந்த ஆசிரிய தின வாழ்த்துகள்..!

Read More:

ஆசிரியர் தின கவிதை

அன்புள்ள ஆசிரியருக்கு கவிதை