கொரோனா பற்றிய கவிதை வரிகள்

Corona Kavithai In Tamil

இந்த பதிவில் இன்று உலகையே அச்சுத்துக் கொண்டிருக்கும் “கொரோனா பற்றிய கவிதை” வரிகளை காணலாம்.

இந்த கொடிய நோயிலிருந்து விடுபட அனைவரும் தன்னம்பிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும்.

  • கொரோனா பற்றிய கவிதை
  • Corona Kavithai In Tamil

போய்விடு கொரோனாவே போய்விடு

கண்ணுக்குத் தெரியாமல் வந்தாய்
கொத்துக் கொத்தாய் பலியெடுக்கிறாய்
கண்காணும்படி பதற வைக்கிறாய்..
சாதி மதம் பாராமல்
வயது பாலினம் கேளாது
உன் பலத்தால் மானிடத்தையே
கொத்துக் கொத்தாய் கொல்கிறாயே கொரோனா..

உன் வரவால் உலகமே பதறுகின்றது
அறியாமையால் செய்யும் சதிக்கு
மனிதனுக்கு நீ பாடம் புகட்டுகின்றாய்
திரை மறைவிலிருந்து
திடீர் மரணம் மனிதர்களுக்கு
விதியாகிவிட்டது போல்..
மரணம் எனும் மருந்துக்கு
மனிதனை மாட்டி விட்டாயே கொரோனவே..

வூகானில் பிறந்தாய்
பாரெங்கும் பரவினாய்
கணப் பொழுதில் அடக்கிவிட்டாய்
மனிதனின் ஆணவத்தையும் அகங்காரத்தையும்
உலகமே உன்னைக் கண்டு நடுங்குகிறது..

மானிடத்தில் நிம்மதியை குலைத்தாய்
வீட்டினில் அடக்கி வைத்தாய்
அடங்கா விட்டால் அடக்குவேன் என்று
அச்சுத்துகின்றாய்..
கொரோனவே போய்விடு
போய்விடு கொரோனவே.!

Read more from New Tamil Quotes.

காதல் தோல்வி கவிதை

Tamil Quotes For Life