ஒரு வரி சிந்தனை துளிகள்

One Line Quotes In Tamil

இந்த பதிவில் “ஒரு வரி சிந்தனை துளிகள்” பார்க்கலாம்.

  • ஒரு வரி சிந்தனை துளிகள்
  • One Line Quotes In Tamil

ஒரு வரி சிந்தனை துளிகள்

1. தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை.

2. மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும்.

3. எண்ணம் ஒரு மலர்! மொழி அதன் மொட்டு! செயல் அதன் கனி!

4. நேர்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது.

5. மற்ற அனைத்து குணங்களைவிடவும் மிக முக்கியமானது, துணிவு.

6. உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான இரு வழி உரையாடலே பிரார்த்தனை.

7. பணம் ஒரு சிறந்த வேலைக்காரன், மோசமான எஜமானன்.

8. ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.

9. எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.

10. அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.

11. குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.

12. பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.

13. கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.

14. நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, கற்பியுங்கள்; நீங்கள் அடையும்போது, கொடுத்தளியுங்கள்.

15. பொய்கள் மூன்று வகைப்படும். ஒன்று புளுகு, இரண்டாவது அண்டப் புளுகு, மூன்றாவது புள்ளி விவரங்கள்.

16. எடுத்துச் சொல்வதைவிட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.

17. ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது.

18. பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.

19. உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.

20. மனிதன் என்னவாக இல்லையோ அதை ஈடுசெய்ய அவனுக்கு கொடுக்கப்பட்டதே கற்பனைத்திறன்.

One Line Quotes In Tamil

21. மோசமான தனிமை என்பது உண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே.

22. புகழ் நெருப்பைப்போன்றது, அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம்.

23. பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை.

24. அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வது உண்மையில் சாத்தியமற்ற ஒன்று.

25. நோய்களை விட மோசமானது அவற்றுக்கான தீர்வு.

26. இன்பத்தை இரட்டித்துப் துன்பத்தைப் பாதியாகப் குறைப்பது நட்பு.

27. புகழை நோக்கி ஓடாதீர்கள், புகழை நீக்கியும் ஓடாதீர்கள்.

28. பழி வாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆற விடுவதில்லை.

29. மோசமான மனிதர்களே பெரும்பாலும் சிறந்த ஆலோசனையை தருகிறார்கள்.

30. நாம் நீதியை பராமரிக்கவில்லை என்றால், நீதி நம்மை பராமரிக்காது.

31. சந்தேக எண்ணங்கள் வெளவால் போன்றவை. அவை மங்கலான வெளிச்சத்தில்தான் பறக்கின்றன.

32. இன்பத்தை இரட்டிப்பாக்கி துன்பத்தைப் பாதியாகக் குறைப்பதுதான் நட்பு!

33. உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது என்பது, உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்.

34. குருடனால் பார்க்க முடிவதற்கும், செவிடனால் கேட்க முடிவதற்குமான மொழி, கருணையே.

35. மனித இனத்திடம் உள்ள ஒரு உண்மையான பயனுள்ள ஆயுதம், சிரிப்பு.

36. புன்னகைக்காத எவர் மீதும் நான் நம்பிக்கைக் கொண்டதில்லை.

37. நீங்கள் செயல்படாதவரை எதுவும் தானாக இயங்காது.

38. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த வழி, மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பதே.

39. பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்ப்பதால் நம்முடைய துன்பங்களைச் சகிக்க கற்றுக்கொள்ளலாம்.

40. ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம் நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம்!

Read more from New Tamil Quotes.

தமிழ் ஒரு வரி தத்துவங்கள்

ஒரு வரி கவிதை தமிழ்