புதிய சிந்தனை துளிகள்

Puthiya Sinthanai In Tamil

இந்த பதிவில் “புதிய சிந்தனை துளிகள்” பார்க்கலாம்.

  • புதிய சிந்தனை துளிகள்
  • Puthiya Sinthanai In Tamil

புதிய சிந்தனை துளிகள்

1.அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான். அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள்.

2. பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.

3. பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது.

4. கொடுப்பது நல்ல விஷயம்தான். நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம், யாருக்கும் கொடுக்கலாம். ஆனால் தற்பெருமைக்காகக் கொடுப்பதற்கும், மனத்தின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு.

5. உங்கள் மனம் புத்திக் கூர்மையும் தந்திரமும் கொண்டது. உங்களுக்கு ஒன்றில் சலிப்பேற்பட்டதும் இன்னொன்றை அது நாடச் செய்யும்.

6. பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை.

7. உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம். ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன்.

8. உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள். அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

9. உடை உடுத்துவதில் கவனக்குறைவாக இருக்கலாம். ஆனால் நேர்மையைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவு கூடாது.

10. உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.

11. எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும்.

12. எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை.

Puthiya Sinthanai In Tamil

13. நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம்.

14. மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்.

15. வாழ்க்கையில் ஒரு துன்பத்தை விட்டு வேறொரு துன்பத்தை அடையும்போது ஏற்படும் மாறுதல் ஒருவகை இன்பத்தை உண்டாக்குகிறது.

16. உலகத்துக்கே பொதுவான பெரிய குறைகள் இரண்டு உள்ளன. ஒன்று மூடநம்பிக்கை, மற்றொன்று ஆடம்பரம்.

17. விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிட மக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும்.

18. இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்? எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோது இரக்கம் பயன்படுவதே இல்லை.

19. எளிய வாழ்வைப் பற்றிப் பேசுவதற்கும் தயங்குவதில்லை, எழுதுவதற்கும் தயங்குவதில்லை. வாழ்வதற்கு மட்டும் தயங்குகிறோம்.

20. சமுதாயத்தில் நல்ல கருத்து உருவாகிவிட்டால், அதன் பிறகு தீய அரசாங்கம் ஏற்பட முடியாது. ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது.

21. வெற்றி என்பது முடிவும் அல்ல, தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல. இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது.

22. உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள், புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும்.

23. உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும் ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.

24. வெற்றியடைய வேண்டும் என்று செயல்படுபவர்கள் பணக்காரர்கள்; தோல்வியடையக் கூடாது என்று செயல்படுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்.

Read more from New Tamil Quotes.

ஒரு வரி கவிதை தமிழ்

தமிழ் ஒரு வரி தத்துவங்கள்