பொங்கல் கவிதை வாழ்த்து

pongal valthu kavithai in tamil

பொங்கல் கவிதை வாழ்த்து

தை மாத பண்டிகை – நம்
தை திருநாளாம் இன்று..
உழவர் போற்றும் – நம்
உண்ணதமான நாளாம் இன்று..

உழவர் திருநாளாம் – நம்
உழவர் மகிமை சொல் நாளாம் இன்று..
இறைவன் தந்த கொடையாம் – நம்
உள்ளம் மகிழ்ந்த நாளாம் இன்று..

பட்டாசுகள் உண்டு – நம்
பண்டிகையில் கொண்டாட்டம் இன்று..
புத்தாடை உண்டு – நம்
உள்ளங்களில் உற்சாகம் இன்று..

இனிப்புகள் உண்டு – நம்
மனதில் மகிழ்ச்சி இன்று..
உணவுகள் உண்டு – நம்
உழவர்களின் உழைப்பு இன்று..

உறவுகளை கண்டு – நம்
இன்பங்களை பகிர்வோம் இன்று..
நண்பர்கள் இடையே – நம்
நினைவுகளை பதிப்போம் இன்று..

கூடி வாழ்வோம் என்றும் – நம்
அன்பை பகிர்வோம் இன்று..
இனிய தைத்திருநாளன்று – என்
இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்கள்..!

பொங்கல் வாழ்த்து கவிதை

தை ஒன்றில் பிறக்கும் நம்
தைத்திருநாள் இன்று..
என் இனிய தைத்திருநாள்
வாழ்த்துகள்..!

உழவர் போற்றும் நம்
உழவர் திருநாளாம் இன்று..
என் இனிய உழவர் திருநாள்
வாழ்த்துகள்..!

சூரியனுக்கு நன்றி சொல்லும் நம்
சூரியபொங்கல் திருநாள் இன்று..
என் இனிய சூரியபொங்கல் திருநாள்
வாழ்த்துகள்..!

தமிழரின் பெருமையை பறைசாற்றும் நம்
தமிழர் திருநாள் இன்று..
என் இனிய தமிழர் திருநாள்
வாழ்த்துகள்..!

உழவர்கள் நாட்டிய பயிரை அறுவடை செய்யும் நம்
அறுவடை திருநாள் இன்று..
என் இனிய அறுவடை திருநாள்
வாழ்த்துகள்..!

அறுவடை செய்த அரிசியை பொங்கும் நம்
பொங்கல் திருநாள் இன்று..
என் இனிய பொங்கல் திருநாள்
வாழ்த்துகள்..!

உற்றார், உறவினர், நண்பர் என காண்போர் நம்
காணும் பொங்கல் இன்று..
என் இனிய காணும் பொங்கல்
வாழ்த்துகள்..!

தோழனாய் உதவி செய்த மாட்டுக்கு நன்றி சொல்லும் நம்
மாட்டு பொங்கல் இன்று..
என் இனிய மாட்டு பொங்கல்
வாழ்த்துகள்..!

எல்லோருக்கும்,
என் இனிய தைப்பொங்கல்
வாழ்த்துகள்..!

பொங்கல் கவிதை தமிழ்

அறுவடை நெல்லை
அரிசியாக்கி,
உழவனின் உழைப்புக்கு
ஊதியம் இட்டு,
தமிழுக்கு தை ஒன்றில்
தைத்திருநாளாம் அன்று
புத்தாடை அணிந்து,
பட்டாசு வெடித்து,
மங்கையரின் சிரிப்பு
கலகலக்க,
வீடுகள் எங்கும் கோலம் இட்டு
இளந்தாரிகளின் வீரத்தை
கரும்புகள் கை பார்க்க,
புதுப்பானை பளபளக்க,
உற்றார் உறவினர்
வருகை எதிர் பார்க்க,
புதுப்பானையின் அழகை
நெருப்பும் மெருகூட்ட,
சூரியனின் வருகையை
காத்து வெட்கப்பட்டு
பொங்கல் பானை பொங்க
அதனுடன் சேர்ந்து நாமும்
பொங்கலோ பொங்கல் என
உரத்து சொல்லுகையில்
உள்ளமும் இல்லமும் அகமகிழும்
அழகை சொல்ல வார்த்தை ஏதடி?

இனிய தைத்திருநாள்
வாழ்த்துகள்..!

Read More:

ஆசிரியர் தின வாழ்த்து கவிதை

தேர்தல் விழிப்புணர்வு கவிதை